/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்
தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்
தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்
தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்
ADDED : செப் 07, 2011 12:16 AM
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட்.
நேற்றுமுன்தினம் இரவு
ஐந்து காட்டு யானைகள் இங்குள்ள ரேஷன் கடை மேற்கூரையை உடைத்து
சேதப்படுத்தின. தொழிலாளர்கள் மற்றும் வனத்துறையினர் திரண்டு வந்து காட்டு
யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.தீப்பந்தம் ஏந்தியும், தகரத்தில் அதிக
ஒலி எழுப்பச் செய்தும், பட்டாசு வெடித்தும், இரண்டு மணி நேர
போராட்டத்திற்கு பின், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதற்கிடையே, பச்சமலை எஸ்டேடில் இரண்டு குட்டிகளுடன் ஏழு யானைகள் தேயிலை
தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று பகல் முழுவதும் ஜாலியாக உலா
வந்தன. இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறை வனச்சரக அலுவலர் லட்சுமணசாமி கூறுகையில், ''ரேஷன் கடையில்
பொருட்கள் இருப்பு வைப்பதால் தான், காட்டு யானைகள் அந்த வாசத்தில் அரிசியை
ருசிக்க வருகின்றன. இதை தவிர்க்க, கடையில் ரேஷன் அரிசி இருப்பு வைக்க
வேண்டாம் என்று பல முறை கூறியுள்ளோம்,'' என்றார்.


