ADDED : செப் 08, 2011 01:24 AM
ஊட்டி : ஊட்டி பிஷப் அமல்ராஜ் கூறியதாவது:இந்தியா மற்றும் கனடா நாட்டு கூட்டு முயற்சியில் 'குடும்ப தத்தெடுப்பு திட்டம்' கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டம் சென்னை, கோவையை அடுத்து நீலகிரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உடல் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதன் உதவி தொகை 117 குடும்பங்களுக்கு 800 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இவ்வாறு பிஷப் அமல்ராஜ் கூறினார்.


