ADDED : செப் 08, 2011 01:27 AM
தர்மபுரி: பென்னாகரம் அருகே குடும்ப தகராறில், முதியவர் தூக்கு போட்டு
தற்கொலை செய்துகொண்டார்.பென்னாகரம் அடுத்த ஏரியூர் மஞ்சாரப்பட்டியை
சேர்ந்தவர் இருசப்பன் (60).
இவருக்கும், இவரது சகோதரருக்கும் நிலம்
பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம்
இருசப்பனுடன் அவரது அண்ணன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகராறு
செய்துள்ளனர். மனமுடைந்த இருசப்பன் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள
மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏரியூர் போலீஸார்
விசாரிக்கின்றனர்.


