/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊராட்சிகள் பயன் பெற புதிய குடிநீர் திட்டம்ஊராட்சிகள் பயன் பெற புதிய குடிநீர் திட்டம்
ஊராட்சிகள் பயன் பெற புதிய குடிநீர் திட்டம்
ஊராட்சிகள் பயன் பெற புதிய குடிநீர் திட்டம்
ஊராட்சிகள் பயன் பெற புதிய குடிநீர் திட்டம்
ADDED : செப் 08, 2011 02:05 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், எஸ்.நல்லூர் ஊராட்சியை தலைமையாக கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டம் இன்று துவங்குகிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்டு 26 ஊராட்சிகள் உள்ளன.
இதில், எஸ்.நல்லூர் ஊராட்சி சுற்றுப்பகுதிகளுக்கு, கம்பாலப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழியாறு ஆற்றிலிருந்து தண்ணீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சில ஊராட்சிகள், சமத்தூர் பேரூராட்சி, எஸ்.நல்லூர் ஊராட்சிகள் பயன் பெற்று வருகின்றன. குடிநீர் குழாயில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். இதனால், எஸ். நல்லூர் தலைமையாக கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டம் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் ஏற்று கொண்டது. இதனால், எஸ்.நல்லூர் ஊராட்சியை தலைமையாக கொண்டு 25 லட்சம் மதிப்பில் புதிதாக மயிலாபுரம் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்படவுள்ளது. இதற்காக, துவக்க விழா இன்று நடக்கிறது. இத்திட்டம் மூலம், எஸ்.நல்லூர், கரையாம்பாளையம், மயிலாபுரம், அமிச்சியகவுண்டனூர், ரெட்டியார்மடம், ரெட்டியாரூர் ஆகிய கிராமங்கள் பயன் பெறும். இக்கிராமங்களுக்கு, பாலாறு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படவுள்ளது.எஸ்.நல்லூர் ஊராட்சி தலைவர் யுவராஜ் கூறியதாவது:புதிதாக துவங்கப்படவுள்ள மயிலாபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட துவங்கியதும், பாலாற்றில் தொடர்ச்சியாக நீர் வரத்து இருப்பதுடன், பாலாற்றிலுள்ள மணல் பாதுகாக்கப்படும். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆழ்குழாய் கிணறுகளின் பயன்பாடு குறைந்து, மின்சார சிக்கனம் செய்ய முடியும். ஊராட்சிகளின் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு தொட்டிகளும், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஐந்து தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பயன் பெற முடியும், என்றனர்.


