/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் நூற்பாலையை இயக்கத் தேவை ரூ.30 கோடி உத்தேச மதிப்பீட்டில் அரசுக்கு கோரிக்கைசேலம் நூற்பாலையை இயக்கத் தேவை ரூ.30 கோடி உத்தேச மதிப்பீட்டில் அரசுக்கு கோரிக்கை
சேலம் நூற்பாலையை இயக்கத் தேவை ரூ.30 கோடி உத்தேச மதிப்பீட்டில் அரசுக்கு கோரிக்கை
சேலம் நூற்பாலையை இயக்கத் தேவை ரூ.30 கோடி உத்தேச மதிப்பீட்டில் அரசுக்கு கோரிக்கை
சேலம் நூற்பாலையை இயக்கத் தேவை ரூ.30 கோடி உத்தேச மதிப்பீட்டில் அரசுக்கு கோரிக்கை
ADDED : செப் 08, 2011 02:22 AM
சேலம்:'முப்பது கோடி ரூபாய் முதலீடு செய்வதோடு, ஐந்தாண்டுக்கு தள்ளுபடி,
மானியமும் தந்தால், சேலம் நூற்பாலையை நிரந்தரமாக லாபத்தை நோக்கி இயக்க
முடியும்' என்று உத்தேச மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
மதிப்பீடு, அரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சேலத்தில்,
1964ல் நிறுவப்பட்ட கூட்டுறவு நூற்பாலை, 1984ல், 50 ஆயிரம் நூற்புத்திறன்
கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால்.,
துவக்கி வைக்கப்பட்டது. 1,200 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கையால்,
தனியார் நூற்பாலைகள் உற்பத்தியை துவங்கின. அவற்றோடு, கூட்டுறவு நூற்பாலை
போட்டிபோட முடியவில்லை.அதனால், படிப்படியாக நலிவடைந்த கூட்டுறவு நூற்பாலை,
2004ல் இழுத்து மூடப்பட்டது. தொழிலாளர்கள், 800 பேர், விருப்ப ஓய்வில்
செல்ல, 222 பேரின் நிலைமை கேள்விகுறியானது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,
நிரந்தர தொழிலாளர்களான இவர்கள், மூடிய ஆலையை திறக்கக்கோரி தொடர்ந்து, அரசை
வலியுறுத்தி வந்தனர். தற்போது, பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு,
தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, ஆலையை விரைவில் திறக்க
நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.நூற்பாலையை மீண்டும் திறப்பதற்கான
உத்தேச மதிப்பீடு தயார் செய்து அனுப்பும்படி, தொழிலாளர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுபவம் மிக்க தொழிலாளர்கள், தொழில் நுட்ப
வல்லுனர்கள் மற்றும் கோவை லஷ்மிமில்ஸ் உதவியுடன் உத்தேச மதிப்பீடு தயார்
செய்தனர்அதில், சேலம் நூற்பாலையை திறந்து முதற்கட்டமாக, 12 ஆயிரம்
நூற்புத்திறன் கொண்டதாக இயக்க வேண்டும்.
ஆண்டுக்கு, 2,000 நூற்புத்திறன்
அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு போதுமான இடவசதி உள்ளது.ஆலைக்கு,
12 ஆயிரம் நூற்புத்திறன் இயந்திரம் வாங்க, 15 கோடி, காற்றாலை நிறுவ, 3
கோடி, கட்டிடங்கள் மற்றும் விற்காத மெஷினரிகள் பழுதுபார்க்க, 20 லட்சம்,
எதிர்பாராத செலவினம், 20 லட்சம், நடைமுறை மூலதனம், 15 கோடி, நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய
நிலுவை தொகை, 1. 2 கோடி, கொடுக்க வேண்டிய ஓய்வுகால நிதி, 50 லட்சம் ரூபாய்
என, மொத்தம், 35.10 கோடி ரூபாய் தேவை. தற்போதுள்ள, பழைய இயந்திரங்களை
விற்பதன் மூலம், 5 கோடி ரூபாய் கிடைக்கும்.
ஆலையின் முழுமையான மின்
தேவைக்கு, காற்றாலை நிறுவுவதன் மூலம் மின் செலவு, 50 சதவீதம் குறையும். 12
ஆயிரம் நூற்புத்திறன் கொண்டு ஆலையை இயக்கினால், 250 தொழிலாளர்களுக்கு
நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும்.ஆலையை, 12 ஆயிரம் நூற்புத்திறனுடன்
இயக்கினால், ஆண்டுக்கு உற்பத்தியாகும் நூல் விவரம்:கோம்டு வகை (30ம்
நெம்பர்) நூல், 26.87 லட்சத்து 40 கிலோ உற்பத்தி செய்யலாம். தற்போது, இதன்
விலை கிலோ, 170 வீதம் மொத்தம், 45.67 கோடியே 96 ஆயிரத்து 800 ரூபாய்
வருவாய் கிடைக்கும்.இதற்கான செலவினம், கிலோ பஞ்சு, 90 ரூபாய் வீதம், 32.58
ஆயிரத்து 800 கிலோ பஞ்சு விலை, 29.32 கோடியே 92 ஆயிரம் ரூபாய். மின்
கட்டணம், 2.28 கோடியே, 39 ஆயிரத்து 840 ரூபாய், ஸ்டோர் பேக்கிங்
போக்குவரத்துக்கு, 2.28 கோடியே 39 ஆயிரத்து 840 ரூபாய், செலுத்தும் கடன்,
வட்டி தொகை, தேய்மான செலவு, 6.85 கோடியே 19 ஆயிரத்து 520 ரூபாய், தொழிலாளர்
சம்பளம், 5.48 கோடியே 15 ஆயிரத்து 616 ரூபாய். இதர செலவினம், 1.37கோடியே 2
ஆயிரத்து 904 ரூபாய். மொத்தம், 45.67 கோடியே 96 ஆயிரத்து 800 ரூபாய்
ஆகிறது.இந்த அடிப்படையில் திட்டமிட்டால், அரசுக்கு தேவையான இலவச வேஷ்டி,
சேலை, பள்ளி சீருடை, சிறைத்துறை, அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி
நிறுவனங்கள் உட்பட அரசுக்கு தேவையான துணிகள், வெளிமார்க்கெட்டில், 1,000
கோடி ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்வதை அறவே தவிர்த்து விடலாம். ஆலையில்,
சேதமாகும் கழிவு பஞ்சுகளை கொண்டு, ஒ.இ.,மெஷின் மூலம், 10 நெம்பர் நூல்கள்
உற்பத்தி செய்யலாம். அதில், தனி வருவாய் கிடைக்கும்.இதற்காக, அனைத்து வகை
மத்திய, மாநில அரசு வரிகள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை, 5
ஆண்டுக்கு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டணத்தில், 50 சதவீத
சலுகை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் விதித்துள்ள தண்டத்தீர்வை
(அபராதத்தொகை) தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போதுள்ள கடனுக்கான வட்டியையும்
தள்ளுபடி செய்தால், 5 ஆண்டில் அசலை திருப்பி செலுத்தும் வழிவகை ஏற்படும்.கடனுதவியோடு, தள்ளுபடி சலுகையும் வழங்கினால் ஐந்தாண்டில் சேலம் கூட்டுறவு
நூற்பாலை உன்னத நிலையை அடைந்து, லாபத்தில் இயங்கி தொழிலாளர்களுக்கு நிரந்தர
வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு உத்தேச அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


