Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குருநாதசாமி கோவில் கும்பாபிஷேக விழா

குருநாதசாமி கோவில் கும்பாபிஷேக விழா

குருநாதசாமி கோவில் கும்பாபிஷேக விழா

குருநாதசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ADDED : செப் 08, 2011 10:24 PM


Google News
சூலூர் : சூலூர் கெம்பட்டி குலதெய்வம் குருநாதசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.சூலூர், பழைய கிராமச்சாவடி வீதியில் உள்ள கெம்பட்டி குலதெய்வம் குருநாதசாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது.

கும்பாபிஷேக விழா 6ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மாலை முதற்கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகம் மற்றும் யந்திர பிரதிஷ்டையும் நடந்தன.நேற்று காலை 8.00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கும், 8.30 மணிக்கு கோபுரத்திற்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆகம முறைப்படி கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சாமிகள் தலைமையில், சூலூர் வைத்தியநாத சாமி கோவில் அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பேரூராட்சி தலைவர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் கிருஷ்ணன், செயலர் மனோகரன், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us