ADDED : செப் 08, 2011 10:30 PM
ஆனைமலை : ஆனைமலை அடுத்த நா.மூ.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் போட்டித்தேர்வு விழிப்புணர்வும் அதற்கு தயாராகும் முறை பற்றிய கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஒன்னமாரண்ணன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் நித்தியானந்தன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி கே.சி. அகாடமியின் நிறுவனர் நாகராஜன் பேசினார்.இளநிலை மூன்றாமாண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். வேலைவாய்ப்பு அதிகாரி சரண்யா நன்றி கூறினார்.


