ADDED : செப் 09, 2011 10:36 PM
குஜிலியம்பாறை : பாளையம்-திருச்சி ரோட்டில் தனியார் ரைஸ்மில் உள்ளது.
இங்கு, ரேஷன் அரிசியை பயன்படுத்தி, கால்நடைகளுக்கான மாட்டு தீவனம் தயாரிப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. வேடசந்தூர் தாசில்தார் மலைச்சாமி, வட்டவழங்கல் அலுவலர் திலகம், வி.ஏ.ஒ., மனோகரன் திடீர் சோதனை நடத்தினர்.கலப்பு தீவன தயாரிப்பிற்காக வைக்கப்பட்டு இருந்த 148 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட கூடாதென எச்சரித்து விடுக்கப்பட்டனர்.


