Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொழிலாளர்கள் நல அலுவலகம் அமைத்திட லோக் சபாவில் ஆனந்தன் எம்.பி., கோரிக்கை

தொழிலாளர்கள் நல அலுவலகம் அமைத்திட லோக் சபாவில் ஆனந்தன் எம்.பி., கோரிக்கை

தொழிலாளர்கள் நல அலுவலகம் அமைத்திட லோக் சபாவில் ஆனந்தன் எம்.பி., கோரிக்கை

தொழிலாளர்கள் நல அலுவலகம் அமைத்திட லோக் சபாவில் ஆனந்தன் எம்.பி., கோரிக்கை

ADDED : செப் 10, 2011 03:22 AM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் அல்லது கடலூரை மையமாக கொண்டு 'பிராவிடண்ட் பண்ட்' அலுவலகம் ஏற்படுத்த வேண்டுமென லோக்சபா கூட்டத்தில் சிறப்பு தீர்மானத்தை ஆனந்தன் எம்.பி., கொண்டு வந்தார்.விழுப்புரம் தொகுதி எம்.பி., ஆனந்தன் லோக்சபா கூட்டத்தில் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் வருமாறு:விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் பல கிரானைட், கல் குவாரிகள், இந்திய உணவுக் கழகத்தின் மையங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலங்கள், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அலுவலகங்கள், ரயில்வே அலுவலகங்கள் உள்ளன.விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலுள்ள கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரியும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளது.

நாகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், கடலூர் துறைமுகத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.அருகிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் எண்ணெய் மற்றும் காஸ் நிறுவனம், எரிவாயு கழகம், வங்கிகள், இன்சூரன்ஸ், தானிய சேமிப்பு கிடங்குகள் உள்ளன .இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற் சங்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் வேலை தொடர்பான குறைகளை தெரிவிக்க சென்னையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனது தொகுதி மக்களுக்கு வசதியாக விழுப்புரம் அல்லது புதுச்சேரியை மையமாக கொண்ட துணை தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தையும், விழுப்புரம் அல்லது கடலூரை மையமாக கொண்டு பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்தையும் ஏற்படுத்த வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us