துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி:ஏற்காடு வனத்தில் நக்சல் நடமாட்டம்?
துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி:ஏற்காடு வனத்தில் நக்சல் நடமாட்டம்?
துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி:ஏற்காடு வனத்தில் நக்சல் நடமாட்டம்?
கோவை:ஏற்காடு வனத்தில், நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த வாலிபர், கோவையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உள்ள காசிக்கல் மலை கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் செல்வராஜ்,18.
இதில், எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து, நான்கு குண்டுகள், வாலிபரின் அடிவயிற்றில் பாய்ந்து மயங்கினார்.விறகு சேகரிக்கச் சென்ற மகனைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வனப்பகுதிக்குள் தேடியதில், மயங்கிக் கிடப்பதைக் கண்டனர். ஏற்காடு மலைப்பகுதியில், முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 7ம் தேதி சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த வாலிபர், நேற்று காலை இறந்தார். ஏற்காடு வனப்பகுதியில் துப்பாக்கி வந்தது எப்படி? அப்பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ளதா என, ஏற்காடு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.


