Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டி.சி., வழங்காமல் இழுத்தடிப்பு செய்த கல்லூரிக்கு ரூ.43 ஆயிரம் அபராதம்

டி.சி., வழங்காமல் இழுத்தடிப்பு செய்த கல்லூரிக்கு ரூ.43 ஆயிரம் அபராதம்

டி.சி., வழங்காமல் இழுத்தடிப்பு செய்த கல்லூரிக்கு ரூ.43 ஆயிரம் அபராதம்

டி.சி., வழங்காமல் இழுத்தடிப்பு செய்த கல்லூரிக்கு ரூ.43 ஆயிரம் அபராதம்

ADDED : செப் 16, 2011 01:32 AM


Google News

நாமக்கல்: மாணவியின் டி.சி.,யை வழங்காமல் இழுத்தடிப்பு செய்த நாமக்கல் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம், 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். அவரது மகள் தீபா, நாமகல்லில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், விடுதியில் தங்கிப் படித்து வந்தார். விடுதியின் சூழல் அவருக்கு ஒத்துக் கொள்ளாததால், படிப்பை தொடர முடியவில்லை. எனவே, வீட்டு அருகே வண்டலூரில் உள்ள கிரசண்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து மூன்றாம் ஆண்டு படிக்க தீபா முடிவு செய்துள்ளார். அதற்கு, தீபா பயின்று வந்த நாமக்கல் தனியார் கல்வி நிறுவனமும் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, 2004ம் ஆண்டில் கல்லூரி மாறுதலுக்கு ஒப்புதல் கேட்டும், தனது டி.சி., வழங்கக் கோரி நாமக்கல்லில் படிக்கும் கல்லூரி முதல்வரிடம் மாணவி தீபா விண்ணப்பித்துள்ளார்.



எனினும், அதற்கு முதல்வர் அனுமதியளிக்கவில்லை. அதையடுத்து, கல்லூரி சேர்மனிடம் கேட்டபோதும், அனுமதி அளிக்கப்படவில்லை. அதுதொடர்பாக, தொழில் கல்வி இயக்குனர், அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆகியோர் முறையிட்டும் பயன் எதுவும் இல்லை. அதனால், மாணவி தீபா, அந்த ஆண்டு படிப்படை தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டது. அதுதொடர்பாக, மாணவி தீபா, நாமக்கல் பயனீட்டாளர் சங்கம் மூலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், 2004ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நுகர்வோர் நீதிமன்ற தலைவர் கிருஷ்ணராஜாவும், உறுப்பினர் பாலசுப்ரமணியமும், சம்மந்தப்பட்ட தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு, 40 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவாக, 3,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளனர். இத்தொகையை இரண்டு மாதங்களுக்கள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us