ADDED : செப் 24, 2011 09:18 PM
புனே : 2ஜி முறைகேட்டில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் சிதம்பரம் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என் காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.
ராலேகான் சித்தியில், பத்திரிகையாளர்களை சந்தித்த அன்னா ஹசாரே கூறியதாவது, உரிய விசாரணையை குறித்த நேரத்தில் துவக்க வேண்டும், இல்லையெனில் அது மேலும் பலவித ஊழல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயே, சிதம்பரத்தையும் அடைக்க வேண்டும் என்று பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


