திருமங்கலம் தாலுகா அலுவலகம் முற்றுகை
திருமங்கலம் தாலுகா அலுவலகம் முற்றுகை
திருமங்கலம் தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 25, 2011 03:28 AM
திருமங்கலம்:திருமங்கலம் அருகே புதிய உழவர் அட்டையை கிராமத்தில்
அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள்
முற்றுகையிட்டனர்.
கள்ளிக்குடி அருகே கே.வெள்ளாகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது
மேலப்பட்டி. இங்கு 250 குடும்பங்கள் வசிக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில்
உழவர் அட்டை வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த அட்டை மாற்றப்பட்டு
புதிதாக உழவர் அட்டை வழங்கப்பட்டது. 250 பேரில் 80 பேருக்கு மட்டும் அட்டை
வழங்கப்பட்டன. இதனால் கிராமத்தினர் 100 பேர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை
முற்றுகையிட்டனர். அலுவலர்கள் கிராமத்தினரை சமாதானம் செய்தனர். உள்ளாட்சி
தேர்தல் முடிந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள்
உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.


