போலீஸ் கஸ்டடிக்கு மார்ட்டின் அனுமதி
போலீஸ் கஸ்டடிக்கு மார்ட்டின் அனுமதி
போலீஸ் கஸ்டடிக்கு மார்ட்டின் அனுமதி
ADDED : செப் 27, 2011 11:25 PM
கோவை: பண மோசடி வழக்கில் மார்ட்டினை விசாரிக்க, ஒரு நாள் கஸ்டடிக்கு கோர்ட் அனுமதித்தது.
கோவை, சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம்; இன்ஜினியர். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை, 25 லட்ச ரூபாய்க்கு ஏமாற்றி கிரையம் செய்து விட்டதாகவும், மீதிப் பணத்தைக் கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும் மார்ட்டின் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மார்ட்டினிடம் கூடுதல் தகவல் பெற முடிவு செய்தனர். இதற்காக, கோவை ஜே.எம்.எண்:3 கோர்ட்டில் மூன்று நாள் கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்தனர். நேற்று இம்மனு மீதான விசாரணையின் போது, வேலூர் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட மார்ட்டின் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்(பொறுப்பு) தெய்வம், போலீசாரின் மனுவை விசாரித்து, ஒரு நாள்,'கஸ்டடி' விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.


