/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., - மா.கம்யூ., மனு தாக்கல்கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., - மா.கம்யூ., மனு தாக்கல்
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., - மா.கம்யூ., மனு தாக்கல்
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., - மா.கம்யூ., மனு தாக்கல்
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., - மா.கம்யூ., மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 11:26 PM
கடலூர் : கடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு நேற்று ம.தி.மு.க., மற்றும் மா.கம்யூ., கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டு கவுன்சிலர் பதவிகள் மற்றும் நகரமன்ற தலைவர் பதவிக்கும் கடந்த 22ம் தேதி முதல் மனு தாக்கல் நடந்து வருகிறது.
நேற்று அமாவாசை என்பதால் மனு தாக்கல் செய்ய கட்சி சார்பிலும் சுயேச்சைகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.ம.தி.மு.க.,: முன்னாள் நகர செயலர் சேகர் நகரமன்ற தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். மாவட்டச் செயலர் ராமலிங்கம், துணைச் செயலர் செல்வம், வெளியீட்டு அணி செயலர் வந்தியத்தேவன், நெசவாளர் அணி துணைச் செயலர் அப்துல்காதர், தொழிற்சங்க செயலர் மணிமாறன், விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடநாரயணன், வழக்கறிஞர் மன்றவாணன், சவுந்தர் உடனிருந்தனர்.மா.கம்யூ.,: மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன் நகரமன்ற தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். நகர செயலர் சுப்ராயன், ஒன்றிய செயலர் மாதவன், தொழிற்சங்க கூட்டமைப்பு புரு÷ஷாத்தமன், சி.ஐ.டி.யூ., கருப்பையா, ராஜேஷ், ஆனந்த், அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன், எல்.ஐ.சி.,சுகுமாறன் உடனிருந்தனர்.


