/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புரட்டாசி 2ம் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரத்தில் பக்தர்கள் தரிசனம்புரட்டாசி 2ம் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரத்தில் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி 2ம் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரத்தில் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி 2ம் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரத்தில் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி 2ம் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரத்தில் பக்தர்கள் தரிசனம்
ADDED : அக் 03, 2011 03:34 AM
கடலூர் : கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டவது சனிக் கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் ”வாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை மூலவர் தேவநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தேவநாத பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முடிகாணிக்கை செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் ”வாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அர்ச்சகர் ஸ்தானிகர் மிராசு நீலமேக பட்டாச்சாரியார், நரசிம்மன், வெங்கடகிருஷ்ண பட்டர், நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தனர். புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருமஞ்சனம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை செங்கமலத்தாயார் சகிதமாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி பட்டர், பிரபு, நரசிம்மன், நிர்வாக அதிகாரி நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். அதேப்போன்று திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.


