/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மருத்துவக் கழிவு புகையால் மூச்சு திணறல்மருத்துவக் கழிவு புகையால் மூச்சு திணறல்
மருத்துவக் கழிவு புகையால் மூச்சு திணறல்
மருத்துவக் கழிவு புகையால் மூச்சு திணறல்
மருத்துவக் கழிவு புகையால் மூச்சு திணறல்
ADDED : அக் 04, 2011 01:01 AM
துடியலூர் : துடியலூர் அருகே மருத்துவக் கழிவுகளை கொட்டி, தீ வைப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சி உள்ளது.
இங்குள்ள அம்மன்ஸ் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் புகை மூட்டம், மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. இது குறித்து மக்கள் கூறியதாவது:
இரவு நேரத்தில் மருத்துவக்கழிவுகள் ஆம்புலன்ஸ்களில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. அதோடு ஊராட்சி நிர்வாகமும், உள்ளூர் குப்பைகளை இங்கு போடுகிறது. இவற்றை தீ வைப்பதால் வெளியேறும் புகை எங்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்துக்கும், உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.


