/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஹெராயின் கடத்த முயன்ற கும்பலுக்கு 10 ஆண்டு சிறைஹெராயின் கடத்த முயன்ற கும்பலுக்கு 10 ஆண்டு சிறை
ஹெராயின் கடத்த முயன்ற கும்பலுக்கு 10 ஆண்டு சிறை
ஹெராயின் கடத்த முயன்ற கும்பலுக்கு 10 ஆண்டு சிறை
ஹெராயின் கடத்த முயன்ற கும்பலுக்கு 10 ஆண்டு சிறை
ADDED : அக் 04, 2011 01:07 AM
சேலம்: தமிழகம் வழியாக இலங்கைக்கு, ஹெராயின் கடத்த முயன்ற ஐந்து பேருக்கு,
சேலம் நீதிமன்றத்தில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
மாவட்டத்தை சேர்ந்தவர்கள், குமார்(51), ரமேஷ்(44). மகாராஷ்டிரா மாநிலத்தை
சேர்ந்தவர்கள், இரலால் டயாபாய் பார்னர்(52), அமர்பால்ஜெயின்(41), மும்பையை
சேர்ந்தவர் பிரேம்நாத்மிஸ்ரா(36). இவர்கள் ஐந்து பேரும் மும்பையில்
இருந்து, தமிழகம் வழியாக இலங்கைக்கு, ஹெராயின் கடத்த முயற்சி செய்வதாக,
சென்னை போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அரக்கோணம் பஸ்
ஸ்டாண்டில், நின்று கொண்டிருந்த ஐந்து பேர் கும்பலை போதை தடுப்பு பிரிவு
போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, எட்டரை கிலோ ஹெராயின்
பறிமுதல் செய்யப்பட்டது. சர்வேத சந்தை மதிப்பில், ஒரு கிலோ ஹெராயின்
மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய். இந்த வழக்கு சேலம் சிறப்பு நீதிமன்றத்தில்
நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமதிலகம், ஹெராயின் கடத்த முயன்ற ஐந்து
பேருக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும்,
சேகருக்கு ஐந்து லட்சம் ரூபாயும், மற்ற நான்கு பேருக்கு மூன்று லட்சம்
ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


