/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விபத்தில் காயமடைந்த பெண்ணிடம் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலைவிபத்தில் காயமடைந்த பெண்ணிடம் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை
விபத்தில் காயமடைந்த பெண்ணிடம் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை
விபத்தில் காயமடைந்த பெண்ணிடம் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை
விபத்தில் காயமடைந்த பெண்ணிடம் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை
ADDED : அக் 05, 2011 12:43 AM
கடலூர் : சாலை விபத்தில் காயமுற்று மயக்கமடைந்த பெண்ணிடம் ஏழரை சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பெரியார் நகரைச் சேர்ந்தவர் முருகையன், 59.
இவர் கடந்த 1ம் தேதி தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்றார். காரை அப்துல்லா ஓட்டினார்.வேப்பூர் அடுத்த ஐவதுகுடி அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த முருகையன், அவரது மனைவி மணிமேகலை, 48, மகள் சுஷ்மிதா, 10, டிரைவர் அப்துல்லா ஆகியோர் காயமுற்று மயக்கமடைந்தனர். அப்போது மணிமேகலை அணிந்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 சவரன் தாலிச்செயின், வளையல் உட்பட ஏழரை சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


