ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 51 சதவீதம் அகவிலைப் படியாக வழங்கப்படுகிறது. தற்போது 1.7.2011 முதல் 7 சதவீதம் அதிகரித்து 58 சதவீதமாக வழங்கப்படும் என (அரசாணை எண் 273, நாள்: 3.10.2011) அறிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பு குறித்து என்.ஜி.ஓ., சங்க மதுரை மாவட்ட தலைவர் எம்.ஜெயபாலன், 'அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அகவிலைப் படியை உயர்த்தியதற்கு நன்றி' தெரிவித்தார்.


