
ஜனநாயகன்
அள்ளிக் கொட்டியது செல்லுபடியாகாததால்
உள்ளாட்சித் தேர்தலில் 'அரிதார' கட்சிகள்
நெல்லிக்காய் மூடையென சிதறிப்போனதோ!
பொல்லாட்சியால் புறந்தள்ளப்பட்டவர்கள்
இன்று புதுவியூகம் வகுத்தது
உள்ளாட்சியிலும், ஊராட்சியிலும் கல்லா கட்டவோ!
ஏற்றிய ஏணியாய் இருந்தவர்களுக்கு, 'திகார்'
தீர்ப்பு திருப்தி தராததால்
காற்றில்லா பலூனாக எண்ணி 'கை'விட்டனரோ!
ஒன்றிரண்டு சீட்டுக்காக ஏலமிட்ட 'உதிரி'கள்
நன்றி கெட்டுப்போனதென
இன்று ஓலமிடும் எதிரிகளானதோ!
பொது, இடைத்தேர்தல்களில் மடை
திறந்து வந்த பணம், கடைத் தேர்தலில்
காணாது கலங்குகிறதோ, கரைவேட்டிகள்!
ஒவ்வொரு கட்சியும் ஒருவிதமாய் சிந்திக்க
ஓட்டளிக்கும் 'ஜனநாயகன்'
நாட்டுநலன் கருதி நடுநாயகனாய் இருப்பானா!
-ஜி.மனோகரன்


