/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதிநிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி
நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி
நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி
நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி
ADDED : அக் 08, 2011 11:00 PM
கல்லல் : கல்லல் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாணிஸ்ரீ சிவகணேசன் பிரச்சாரம் செய்து பேசியதாவது: கல்லல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும்.சட்டமன்ற உறுப்பினர் உதவியுடன் மருத்துவமனை அமைக்கப்படும்.இந்திரா நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை தொடங்கப்படும்.ஊராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.தொழில் நுட்ப கல்லூரி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.பெண்கள் பள்ளிமேல்நிலைப்பள்ளியாக்கப்படும்.தெருவிளக்கு,குடிநீர் முறைப்படுத்தப்படும்.
மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிற்கடன்,கல்விக்கடன் கிடைக்க எற்பாடு செய்யப்படும்.அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் பாரபட்சமின்றி பெற்று தரப்படும். மாற்றப்பட்ட நிலவள வங்கி மறுபடியும் இங்கு செயல்பட முயற்சி செய்யப்படும்.என்றார்.


