ADDED : அக் 11, 2011 01:37 AM
வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி
வாக்காளர்களுக்கு, தி.மு.க., வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்
எழுந்தது.
நேற்று முன்தினம், 6 வது வார்டு வேட்பாளர் முருகேசன், தி.மு.க.,
நிர்வாகி குமரவேல் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதன்படி, முருகேசனை,
இன்ஸ்பெக்டர் குமரேசன் கைது செய்தார்.


