எதிர்க்கட்சிகள் பயனடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல: அரவிந்த் கெஜ்ரிவால்
எதிர்க்கட்சிகள் பயனடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல: அரவிந்த் கெஜ்ரிவால்
எதிர்க்கட்சிகள் பயனடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல: அரவிந்த் கெஜ்ரிவால்
ADDED : அக் 11, 2011 12:58 PM
ஹிசார்: ஹிசார் இடைத்தேர்தலில் அன்னா ஹசாரே குழுவினரின் ஜன்லோக்பால் மசோதா பிரசாரத்தால் எதிர்க்கட்சிகள் பயனடைந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாங்கள் சமுதாய மாற்றத்திற்காக போராடி வருவதாகவும், எந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிரசாரம் செய்ய வில்லை என்றும், தங்களது போராட்டத்தால் எதிர்க்கட்சிகள் பயனடைந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பாக முடியாது என்று ம்தெரிவித்தார். ஜன்லோக்பால் மசோதா குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிடும் பட்சத்தில் இன்றே தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்வதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். அன்னா ஹசாரேவை ஜனாதிபதி வேட்பாளராக்க முயற்சிப்பதாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.


