Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

ADDED : அக் 12, 2011 02:46 AM


Google News
திருவள்ளூர் : கோவையில் வழக்கறிஞரைத் தாக்கிய போலீசார் மீது, நடவடிக்கை கோரி, திருவள்ளூரில், வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.கோவை, துடியலூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பாக பேச சென்ற வழக்கறிஞரை, போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், வழக்கறிஞரைத் தாக்கிய போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட், மாவட்ட விரைவு கோர்ட், ஜே.எம். முதலாவது கோர்ட், ஜே.எம். இரண்டாவது கோர்ட், சிவில் கோர்ட் ஆகிய கோர்ட்டுகளில், வழக்கறிஞர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us