ADDED : அக் 12, 2011 04:42 PM
புதுடில்லி: ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை மேற்கொண்டு வரும் அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது கருப்பு பணத்தை கொண்டு வர என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளது.


