Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா நகர் தொகுதியில்பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்திரா நகர் தொகுதியில்பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்திரா நகர் தொகுதியில்பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்திரா நகர் தொகுதியில்பலத்த போலீஸ் பாதுகாப்பு

ADDED : அக் 13, 2011 02:06 AM


Google News
புதுச்சேரி:இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திராநகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்று (13ம் தேதி) காலை 8 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழ்ச்செல்வன் (என்.ஆர்.காங்.,), பாஸ்கரன் (அ.தி.மு.க.,), ஆறுமுகம் (காங்.,) உள்ளிட்ட 7 பேர் போட்டியிடுகின்றனர்.வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு கம்பெனி கொண்ட 168 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் 435 பேர், 55 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.பதட்டமானவை என கண்டறியப்பட்ட 6 ஓட்டுச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகின்றனர். அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த 2 மொபைல் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடிகள், மற்றும் 17ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியை ஐ.ஜி., சர்மா, சீனியர் எஸ்.பி.,சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us