Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இசைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

இசைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

இசைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

இசைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

ADDED : செப் 06, 2011 10:32 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் சென்றனர்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்டங்கள் தோறும் இசைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த இசைப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மாதாந்திரம் 200 ரூபாய் உதவித் தொகை வழங்கி முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மாவட்ட இசைப் பள்ளி மாணவர்கள் நேற்று ஊர்வலம் சென்றனர். விழுப்புரம் காந்தி சிலை அருகே துவங்கிய ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய லட்சுமி துவக்கி வைத்தார். இதில், நாதஸ்வர ஆசிரியர்கள் கோதண்டராமன், பிரகாஷ், மிருதங்க ஆசிரியர் ராஜன்பிரகாசம், வயலின் ஆசிரியர் தமிழ்செல்வன், பரதநாட்டிய ஆசிரியர் காஞ்சனா, தவில் ஆசிரியர் முருகையன் மற்றும் இசைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us