Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் ஆண் உடல் மீட்பு

தென்காசியில் ஆண் உடல் மீட்பு

தென்காசியில் ஆண் உடல் மீட்பு

தென்காசியில் ஆண் உடல் மீட்பு

ADDED : ஆக 01, 2011 02:06 AM


Google News
தென்காசி : தென்காசியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது.தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளம் வளாகத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இறந்தவர் ஊதா கலர் கைலியும், வெள்ளை கலர் கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். இடது கையில் சிவா, ராஜி, இசக்கிமுத்து என பச்சை குத்தப்பட்டிருந்தது. இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என்றும், இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி விசாரணை நடத்தி வருகிறார்.சம்பவ இடத்தை டிஎஸ்பி பாண்டியன் பார்வையிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us