ADDED : செப் 14, 2011 05:14 PM
மும்பை : இரண்டாம் வகை நீரிழிவு நோய் காரணமாக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ஜ., கட்சி தலைவர் நிதின் கட்காரிக்கு ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில கட்சி செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறியதாவது, கட்காரிக்கு தற்போது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகவும், இனி பயப்படத் தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவர் குறைந்தது ஒருவார கால அளவிற்கு ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் பண்டாரி தெரிவித்தார்.


