/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி முழுவதும் கால்நடை முகாம்: 10ம் தேதி முதல் துவங்குகிறதுபுதுச்சேரி முழுவதும் கால்நடை முகாம்: 10ம் தேதி முதல் துவங்குகிறது
புதுச்சேரி முழுவதும் கால்நடை முகாம்: 10ம் தேதி முதல் துவங்குகிறது
புதுச்சேரி முழுவதும் கால்நடை முகாம்: 10ம் தேதி முதல் துவங்குகிறது
புதுச்சேரி முழுவதும் கால்நடை முகாம்: 10ம் தேதி முதல் துவங்குகிறது
ADDED : அக் 04, 2011 01:55 AM
புதுச்சேரி : கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புதுச்சேரி முழுவதும்
கால்நடை நல சிகிச்சை முகாம் வரும் 10ம் தேதி துவங்குகிறது.கால்நடைத் துறை
இயக்குனர் பத்மநாபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கால்நடை பராமரிப்பு
துறை சார்பில், கால்நடை உரிமையாளர்கள் நலன் கருதி புதுச்சேரி முழுவதும்
வரும் 10ம் தேதி முதல் கால்நடை சிகிச்சை முகாம் நடக்கிறது.
முகாமில்,
சிறப்பு பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் குறிப்பிட்ட கிராமத்தில்
கால்நடைகளுக்கு அனைத்து வகை சிகிச்சை அளிக்கிறார்கள். குறிப்பாக மலட்டுத்
தன்மைக்கு சிகிச்சை, தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம், விரை நீக்கம்,
கால்நடைகளுக்கு பொது மருத்துவம் மற்றும் வளர்ப்பு முறைகள் குறித்து
விளக்கம் அளிக்கப்படுகிறது. முகாம்கள் காலை 9 மணி முதல் 12.30 மணி வரை
நடக்கிறது.இந்த முகாம்கள், வரும் 10ம் தேதி கோர்க்காடு, 11ம் தேதி ஏம்பலம்
நத்தமேடு, 12ம் தேதி ஏரிப்பாக்கம், 13ம் தேதி நெட்டப்பாக்கம், 14ம் தேதி
முத்துப்பிள்ளைப்பாளையம், 17ம் தேதி கல்மேடுபட்டு, 18ம் தேதி தர்மாபுரி,
19ம் தேதி கனகசெட்டிக்குளம், 20ம் தேதி பூரணாங்குப்பம், 21ம் தேதி
நோணாங்குப்பத்தில் நடக்கிறது.வரும் 27ம் தேதி டி.என்.பாளையம், 28ம் தேதி
எடையார்பாளையம், 31ம் தேதி மணமேடு, நவம்பர் 1ம் தேதி சுள்ளியாங்குப்பம்,
2ம் தேதி ஆதிங்கப்பட்டு, 3ம் தேதி சோரியாங்குப்பத்தில் கால்நடை மருத்துவ
முகாம் நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


