ADDED : ஜூலை 15, 2011 03:18 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை யோகிராம் சுரத்குமார்
தியான மண்டபம் டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள்
வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு போர்ட்சிட்டி பெனிபிட் பண்டு லிமிடெட்
நிர்வாக இயக்குனர் சூரியமூர்த்தி, தொழிலதிபர் ராமதிருமலை, தாசில்தார்
கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச நோட்புத்தகம்
கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
ஏற்பாடுகளை யோகிராம் சுரத்குமார் தியான மண்டப
நிர்வாகிகள் செய்திருந்தனர்.


