பழிவாங்கும் நடவடிக்கை: வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி
பழிவாங்கும் நடவடிக்கை: வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி
பழிவாங்கும் நடவடிக்கை: வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி
UPDATED : செப் 07, 2011 01:46 AM
ADDED : செப் 07, 2011 12:48 AM
திருச்சி: நில அபகரிப்பு தொடர்பாக மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திருச்சி மத்திய சிறையில் 12ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக வீரபாண்டி ஆறுமுகம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை உடல்ரீதியா பலவீனப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கு போலீசாரும் துணை போகின்றனர். 7 மணி நேரம் பயணம் செய்ய வைக்கின்றனர். தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.


