ADDED : செப் 16, 2011 03:19 AM
விழுப்புரம்:வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி அரசு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர்
அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகீம் தலைமை
தாங்கினார்.
செயலாளர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை
வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தங்கராசு பேசினார். மாவட்ட
பொருளா ளர் பூபதி நன்றி கூறினார்.


