ADDED : ஆக 03, 2011 10:04 PM
திட்டக்குடி : நிலத்தகராறில் சகோதரர்களை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியைச் சேர்ந்தவர் கருப்புசாமி,38. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமர். இவர்களுக்குள் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராமர், அவரது தந்தை நல்லமுத்து, மனைவி முத்துவட்சுமி, மகேஸ்வரி நால்வரும் சேர்ந்து கருப்புசாமி மற்றும் அவரது தம்பியையும் தாக்கினர். படுகாயமடைந்த கருப்புசாமி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து ராமர் உள்ளிட்ட நான்கு பேரை தேடிவருகின்றனர்.


