Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குற்றவாளிகள் லிஸ்ட் தயாரிக்கும் போலீசார்

குற்றவாளிகள் லிஸ்ட் தயாரிக்கும் போலீசார்

குற்றவாளிகள் லிஸ்ட் தயாரிக்கும் போலீசார்

குற்றவாளிகள் லிஸ்ட் தயாரிக்கும் போலீசார்

ADDED : அக் 06, 2011 09:23 PM


Google News
திருப்பூர் : டூவீலர் திருட்டு, வழிப்பறி, வீடுபுகுந்து திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த பட்டியலை, போலீசார் திரட்டிவருகின்றனர்.தொழில் நகரமான திருப்பூரில், குற்றங்கள் தொடராமல் தடுக்க போலீஸ் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது தீபாவளி நெருங்குவதால், பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் பொருட்டு, குற்றங்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டங்கள், எஸ்.பி., அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. பகல் - இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு, வங்கிகள், ஜவுளி மற்றும் நகை கடைகள், பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன ரோந்து போலீசாரும், ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்துவிடாமல், தொடர்ந்து வாகனங்களில் சென்றபடி, கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றங்கள் தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்த பட்டியல் ஸ்டேஷன் வாரியாக தயார் செய்யப்பட்டு வருகிறது; டூவீலர் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, வீட்டுக்கதவு பூட்டை உடைத்து திருட்டு என குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முழு விவரங்களையும் தயாரித்து, அந்தந்த சப்-டிவிஷன்களில், டி.எஸ்.பி., அலுவலகத்தில் குற்றவாளிகளின் பட்டியலை ஒருங்கிணைத்து, எஸ்.பி., அலுவலகத்துக்கு தர உத்தரவிடப்பட்டுள்ளது.வழிப்பறி, திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட் என குற்றவாளிகளின் மொத்த எண்ணிக்கை; குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பற்றிய தற்போதைய விவரம் என கூடுதல் தகவல்களையும் பட்டியலில் சேர்த்து தர போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் வந்து செல்லும் மக்களின் நகை, பணம் மற்றும் உடைமைகளை பாதுகாக்க எச்சரிக்கை விழிப்புணர்வு வாசகங்களுடன் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது; பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட சில பகுதிகளில், பிக்பாக்கெட், செயின் பறிப்பு திருடர்களின் புகைப்பட ஆல்பம் வைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தீபாவளி நெருங்குவதால், பண்டிகை கால திருட்டுகளை தடுக்கும் முயற்சியாக இப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது; பழைய குற்றவாளிகளை முழுமையாக கண்காணித்து, திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us