ADDED : அக் 05, 2011 10:19 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., மற்றும் கொ.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தன. கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, மொத்தமுள்ள 60 இடங்களில் பா.ஜ., 42 இடங்களிலும், கொ.மு.க., 18 இடங்களிலும், மேயர் பதவிக்கு பா.ஜ., வேட்பாளரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பு மனு தாக்கலின்போது, பா.ஜ., மற்றும் கொ.மு.க.,வினர் தலா 10 இடங்களில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளன.
தற்போது, பா.ஜ., 32 இடங்களிலும், கொ.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட 18 இடங்களில் எட்டு இடங்களில் மட்டுமே போட்டியிட, மனு தாக்கல் செய்தன. இதில், இரண்டு பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், கொ.மு.க., ஆறு இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.


