Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மின்கட்டணம் செலுத்த மக்கள் அவதி

மின்கட்டணம் செலுத்த மக்கள் அவதி

மின்கட்டணம் செலுத்த மக்கள் அவதி

மின்கட்டணம் செலுத்த மக்கள் அவதி

ADDED : அக் 08, 2011 12:28 AM


Google News

திருப்பூர் : கருவம்பாளையம் ஏ.பி.டி., ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று மின்கட்டணம் வசூலிக்கப்படவில்லை.மின் இணைப்புதாரர்கள், தங்களுக்கு வசதியாக, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திலேயே கட்டணம் செலுத்தலாம் அல்லது தபால் அலுவலகம், இணைய தளம், மொபைல் போன் மூலமும், மின் கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த தெரியாத மக்கள், மின்வாரிய அலுவலகத்தை@ய நாடுகின்றனர்.

மின் கணக்கீடு செய்ததும், 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், தினமும் நூற்றுக்கணக்கான மின்நுகர்வோர் மின்வாரிய அலுவலகத்துக்கு செல்கின்றனர்.ஆனால், சில மையங்களில், பெரும்பாலான நேரங்களில் கம்ப்யூட்டர் பழுது என்றே பதில் கூறப்படுகிறது; 'நெட் ஒர்க்' கில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக கூறி, மற்ற பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு செல்லுமாறு, மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.கருவம்பாளையம் ஏ.பி.டி., ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று மின்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆயுதபூஜை, விஜயதசமி இரண்டு நாள் விடுமுறைக்கு பின், நேற்று மின்கட்டணம் செலுத்த வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், குமார் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்துவோர் கூட்டம் அதிகரித்திருந்தது. மின் இணைப்பு தாரர்கள் பல மணி நேரம் காத்திருந்து, மின்கட்டணம் செலுத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us