Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை

தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை

தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை

தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை

ADDED : ஜூலை 14, 2011 01:10 AM


Google News

தென்காசி: 'தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணிக்காக ரயில்வே ரோட்டில் இருந்த வ.உ.சி.நினைவு பூங்கா மற்றும் அதில் இருந்த நவீன கழிப்பிடமும் அகற்றப்பட்டது. பூங்கா இருந்த பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் சர்வீஸ் ரோடு அருகே நவீன கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் தனியார் ஒருவர் கட்டட வாயில் அமைக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டனர்.



அவர்கள் நகராட்சி சுவரை இடித்து விட்டு தனியார் கட்டடத்திற்கு வாயில் அமைக்க கூடாது. இப்பகுதியில் நவீன கழிப்பிடம் கட்ட ஏற்கனவே எம்.எல்.ஏ., உறுதியளித்து அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே விரைவில் நவீன கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.முற்றுகையிட்ட தைக்கா தெருவை சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் மற்றும் நகர அ.தி.மு.க.செயலாளர் முத்துக்குமார் சமாதானமாக பேசியதை அடுத்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகையில் முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, மாரியப்பன், கணபதி, ராஜீ, சுரேஷ், சுப்பிரமணியன், கணேசன், மகேந்திரன், சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us