/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி திட்டம் துவக்கப்படுமா?மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி திட்டம் துவக்கப்படுமா?
மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி திட்டம் துவக்கப்படுமா?
மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி திட்டம் துவக்கப்படுமா?
மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி திட்டம் துவக்கப்படுமா?
ADDED : ஜூலை 25, 2011 11:59 PM
தர்மபுரி: பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ் வசதி திட்டம் துவக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வீடுகளிலிருந்து பள்ளிக்கு சென்றுவர அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. பஸ் பாஸ்களை பயன்படுத்தி பஸ்களில் செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால், அரசு பஸ்களை பல நேரங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி கோட்ட மைய அலுவலகம் மூலம் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ் பாஸ்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பஸ் பாஸ் பெற்றுள்ள மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். இலவச பஸ் பாஸ் டவுன் பஸ்களில் மட்டும் பயன்படுத்த முடியும் என்பதால், மாணவர்கள் அனைவரும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும், 341 டவுன் பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர். கிராமங்களிலிருந்து பள்ளி நேரத்தில் மாணவர்கள் வர பஸ்கள் இல்லாததால், நீண்ட தூரம் நடந்து வந்து பஸ்களை பிடிக்க வேண்டிய நிலையுள்ளது. மேலும், காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் என பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி செல்லமுடியாத நிலையுள்ளது. கூடுதல் பஸ் வசதி கோரி மாவட்ட நிர்வாகத்து வாரந்தோறும் மாணவர்கள் மனு அளித்தும் பலனில்லை. பல நேரங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலால், கண்டக்டர்கள் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விடுகின்றனர். அடுத்த பஸ் இல்லாத நிலையில், வீடு திரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
மாணவர்கள் கல்வி கற்க எவ்வித தடையும் இருக்க கூடாது மற்றும் விரும்பும் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு வழங்கிய பஸ் பாஸை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் கூட்ட நெரிசல் மற்றும் கூடுதல் பஸ் வசதியில்லாத பகுதிகளுக்கு மட்டுமாவது, முதல் கட்டமாக மாணவர்களுக்காக சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.


