Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

ADDED : அக் 05, 2011 12:31 AM


Google News
Latest Tamil News
வத்திராயிருப்பு:சதுரகிரி மலையில் நடந்துவரும் நவராத்திரி விழா , அம்புஎய்தும் நிகழ்ச்சியுடன் நாளை நிறைவடைகிறது.

சதுரகிரி மலையில் ஒரே பெண்தெய்வமாக வீற்றிருக்கும் ஆனந்தவல்லியம்மனுக்காக கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி உள்ளது. திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி காட்சிஅளிக்கிறார். இதை தொடர்ந்து, காலையில் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை நிகழ்ச்சிகளும், மாலையில் சிறப்பு அலங்கார எழுந்தருளலும் நடக்கிறது. இறுதிநாளான நாளை மாலை அம்மன் , அரக்கனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி , முளைப்பாரி ஊர்வலம், கும்மி பூஜைகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் தக்கார் செந்தில்வேலவன், நிர்வாக அதிகாரி ஜவஹர், ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர். விழாவையொட்டி மலையடிவாரம் வரை சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us