Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரசு கேபிள் "டிவி'யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள் பதிவு

அரசு கேபிள் "டிவி'யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள் பதிவு

அரசு கேபிள் "டிவி'யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள் பதிவு

அரசு கேபிள் "டிவி'யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள் பதிவு

ADDED : ஆக 22, 2011 12:42 AM


Google News
Latest Tamil News

சென்னை : அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனில், 38 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மூலம் அனைத்து சேனல்களையும் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடக்கிறது. 'கேபிள் 'டிவி' அரசுடைமையாக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தலைவராக உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணனும், மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயராமனும் நியமிக்கப்பட்டனர்.



அரசு கேபிள் 'டிவி'யில் சேர்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, தனியார் கேபிள் ஆபரேட்டர்களும், சிக்னல்களை பெறும் எம்.எஸ்.ஓ.,க்களும் வரவேற்கப்பட்டனர். இவர்கள் தங்களை பதிவு செய்வதற்கு, கடந்த 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 38 ஆயிரம் பேர், அரசு கேபிள் 'டிவி'யில் இணைய விண்ணப்பித்துள்ளனர். இதில், கேபிள் ஆபரேட்டர்களாக 28 ஆயிரம் பேரும், எம்.எஸ்.ஓ., ஆபரேட்டர்களாக 10 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர். தற்போது, தனியார் 'டிவி' சேனல்களை அனுமதி பெற்று, ஒளிபரப்புவது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. கட்டணச் சேனல்களையும் ஒளிபரப்ப, சேனல் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுமட்டுமின்றி, இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு தொழில்நுட்ப ஆலோசகர் வீதம், 30 மாவட்டங்களில், 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை, வேலூர், தஞ்சை, நெல்லை, வேலூர் உள்ளிட்ட இடங்களில், கட்டுப்பாடு அறைகளை செயல்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us