மாஜி முதல்வர் குமாரசாமி- அவரது மனைவிக்கு முன் ஜாமின்
மாஜி முதல்வர் குமாரசாமி- அவரது மனைவிக்கு முன் ஜாமின்
மாஜி முதல்வர் குமாரசாமி- அவரது மனைவிக்கு முன் ஜாமின்
UPDATED : செப் 08, 2011 03:06 PM
ADDED : செப் 08, 2011 02:13 PM
பெங்களுரூ: சுரங்க மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மீதான ஜாமின் மனுவிசாரணை யில் குமாரசாமி அவரது மனைவி ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது..
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவரது மனைவி அனிதா ஆகியோர் மீது சுரங்க மோசடி புகார் கூறப்பட்டது. பெங்களுரூவில் உள்ள ஜன்தாகல் என்றசுரங்க நிறுவனத்திடமிருந்து, முதல்வராக இருந்த போது ரூ. பல கோடி நிதி பெற்று வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று ஐகோர்டில் நடந்தது. இதில் குமாரசாமி, அனிதா ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனு மீதான விசாரணையில் குமாரசாமி, அனிதா ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


