Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்

மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்

மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்

மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் : அ.தி.மு.க., வேட்பாளர் சிந்து முருகன்

ADDED : அக் 03, 2011 10:56 PM


Google News

ஸ்ரீவில்லிபுத்தூர் : 'மல்லியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்' என அ.தி.மு.க., ஸ்ரீவி.,தொகுதி செயலாளரும் ,அக்கட்சி வேட்பாளருமான சிந்து எம்.முருகன் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஏழாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க, சார்பில், அக்கட்சியை சேர்ந்த ஸ்ரீவி.,தொகுதி செயலளார் சிந்து எம்.முருகன் போட்டியிடுகிறார். இவர் தனது பிரசாரத்தின் போது கூறியதாவது: எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளான மல்லி கஸ்பா, உள்ளூர்பட்டி, உள்ளூர்பட்டி காலனி, ராமகிருஷ்ணாபுரம், அப்பயநாயக்கன்பட்டி, பண்டிதன் பட்டி, வெள்ளாக்குளம் காலனி, பழையப்பட்டி, பழைய பட்டி காலனி, முள்ளிக்குளம், மேட்டு முள்ளிக்குளம், மாயத்தேவன்பட்டி உட்பட கிராம மக்களுக்கு பிரச்னையின்றி அனைத்து நேரமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கிராம தெருக்களுக்கும் தெரு விளக்குகள் பொருத்தப்படும். கிராமங்களில் சுகாதார வசதிக்காக வாறுகால்கள், மகளிர்களுக்காக நகர் புறங்களுக்கு இணையாக நவீன சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் வீடுகள் தோறும் வந்து குப்பைகள் வாங்கவும், வாறுகால் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.



அனைத்து கிராமங்களுக்கும் தார், சிமென்ட் சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். படித்த இளைஞர்கள் தங்கள் பகுதியிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுய தொழில் தொடங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு நிதி உதவி அளித்து, கல்வி கற்க அவர்களின் பாதுகாவலனாக செயல்படுவேன். இப்பகுதி கிராமங்களில் கால்நடை பராமரிப்பிற்காக புதிய கால் நடை மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிக்கு வர வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் ,பஸ் போக்குவரத்தே இல்லாத பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் கர்ப்பிணிகள், மக்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க மல்லியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகாலமாக எவ்வித வசதியும் இல்லாமல் பின்தங்கி இருண்ட நிலையில், இருந்த இப்பகுதி மக்களுக்கு சாதி, மத பேதமின்றி அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசின் விலையில்லாத நலத்திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கும் வீடு தேடி கிடைக்கும் வகையில் செய்வேன்,என்றார் .









      Our Apps Available On




      Dinamalar

      Follow us