கடந்த வார நிகழ்வுகள் - தமிழக சட்டசபை
கடந்த வார நிகழ்வுகள் - தமிழக சட்டசபை
கடந்த வார நிகழ்வுகள் - தமிழக சட்டசபை
ADDED : செப் 11, 2011 12:48 AM

செப். 5 : தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த சொத்துக்கள் பற்றிய, விவரங்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., உறுப்பினர்கள் பேசிய போது, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதற்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
செப். 6 : 'அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில், உடனே மாற்றங்கள் செய்ய, நகராட்சி கட்டட விதிகள், உள்ளாட்சி கட்டட விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும்' என, சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை மீது நடந்த விவாதத்திற்கு, அமைச்சர் செல்வி ராமஜெயம் பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
செப். 6 : ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஊக்கத் தொகை, ஒரு கோடியில் இருந்து இரண்டு கோடியாக உயர்த்தி வழங்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


