Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வழக்கறிஞர் கொலை வழக்கில்சி.பி.ஐ., எப்போது ஆஜர்?ஐகோர்ட் கேள்வி

வழக்கறிஞர் கொலை வழக்கில்சி.பி.ஐ., எப்போது ஆஜர்?ஐகோர்ட் கேள்வி

வழக்கறிஞர் கொலை வழக்கில்சி.பி.ஐ., எப்போது ஆஜர்?ஐகோர்ட் கேள்வி

வழக்கறிஞர் கொலை வழக்கில்சி.பி.ஐ., எப்போது ஆஜர்?ஐகோர்ட் கேள்வி

ADDED : அக் 11, 2011 11:21 PM


Google News
சென்னை:சி.பி.ஐ., இயக்குனர் நேரில் ஆஜராக வசதிப்படும் தேதியை தெரிவிக்குமாறு, சிறப்பு வழக்கறிஞருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சி.பி.ஐ., விசாரணையை துவங்கி, கோர்ட்டில் அறிக்கையை அவ்வப்போது தாக்கல் செய்து வருகிறது.இவ்வழக்கு, நீதிபதிகள் நாகப்பன், சிவகுமார் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புலன்விசாரணை குறித்து நீதிபதிகள் சில விவரங்களை கேட்டனர். இதற்கு, சி.பி.ஐ., இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என நீதிபதிகள் கூறினர்.இதையடுத்து, சி.பி.ஐ., இயக்குனர் ஆஜராக வசதிப்படும் தேதியை கேட்டு தெரிவிக்குமாறு, சி.பி.ஐ., சிறப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 13ம் தேதி(நாளை)க்கு தள்ளிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us