/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊராட்சி உதவியாளர் இனி, ஊராட்சி செயலாளர்ஊராட்சி உதவியாளர் இனி, ஊராட்சி செயலாளர்
ஊராட்சி உதவியாளர் இனி, ஊராட்சி செயலாளர்
ஊராட்சி உதவியாளர் இனி, ஊராட்சி செயலாளர்
ஊராட்சி உதவியாளர் இனி, ஊராட்சி செயலாளர்
ADDED : செப் 08, 2011 10:22 PM
பெ.நா.பாளையம் : தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 618 ஊராட்சி
உதவியாளர்கள், இனி ஊராட்சி செயலாளர்கள் என அழைக்கப்படுவர். இவர்களுக்கு
சிறப்பு படியாக மாதம் 500 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். அ.தி.மு.க., வின்
தேர்தல் அறிக்கையில் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர் என்ற
பணியிடத்தை ஊராட்சி செயலாளர் என மாற்றம் செய்து, அவர்களுக்கு பண பலன்கள்
வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி, ஊராட்சி உதவியாளர்களை
ஊராட்சி செயலாளர்களாக பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தற்போது,
ஊராட்சி உதவியாளர்கள் வரி கேட்புகளை தயாரித்தல், வருவாய் வசூல், ரசீது
புத்தகங்கள், இதர பதிவேடுகள் பராமரித்தல், ரொக்கப் புத்தகம் வருவாய்
மற்றும் செலவினம் தொடர்புடைய 1 முதல் 31 பதிவேடுகள் பராமரித்தல்,
ஊராட்சியின் மாதாந்திர கூட்டம், கிராம சபை கூட்டங்களை ஏற்பாடு செய்தல்,
ஊராட்சி தீர்மானங்களை பி.டி.ஒ., மற்றும் உதவி இயக்குனருக்கு அனுப்புதல்,
ஊராட்சியில் குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரித்தல், சாலை
பராமரிப்பு, மத்திய மாநில அரசுகளால் கொண்டு வரப்படும் திட்டங்களை
செயல்படுத்துதல் ஆகியவற்றில் கிராம ஊராட்சி தலைவருக்கு உதவுதல், கிராம
ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், ஊராட்சி புறம்போக்கு நிலங்கள்
பற்றிய பதிவேடுகளை பராமரித்தல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினசரி
பணியாளர் வருகை பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு
வருகின்றனர். இது தவிர சோலார் விளக்குகள் பராமரிப்பு, சுகாதார வளாகங்களின்
பராமரிப்பு பணிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை
மேற்கொள்கின்றனர். அனைத்து திட்டங்களின் பயன்களும் உரிய பயனாளிகளுக்கு
சென்றடைய ஊராட்சி உதவியாளர் பங்கு பெருமளவு உள்ளதால் ஊராட்சி உதவியாளர்
என்ற
பணியிடத்தினை ஊராட்சி செயலாளர் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தற்போது ஊராட்சி உதவியாளர்கள் பெற்று வரும்
காலமுறை ஊதியத்துடன் சிறப்பு படியாக மாதம் 500 ரூபாய் கூடுதலாக பெறுவர்.
இச்சம்பள உயர்வுக்கு தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் சங்க மாநில தலைவர்
ரங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


