Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு

பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு

பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு

பாலங்களில் செடிகள்: வேளாண் துறையை நாட முடிவு

ADDED : ஆக 28, 2011 12:38 AM


Google News

மதுரை : மதுரை மேம்பாலங்களில் அடிக்கடி துளிர்விடும் செடிகளை நிரந்தரமாக களைவது குறித்து, வேளாண்துறையின் உதவியை நாட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

மதுரையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ளன. பாலத்தில் மழைநீர் வடியும் இடத்தில் அரச மரக்கன்றுகள் துளிர்விட்டு, செடிகளாக வளருகின்றன. இதனால் பாலத்தின் உறுதிதன்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இரு நாட்களுக்கு முன், ஏ.வி.பாலத்தின் அடியில் வளர்ந்த செடிகளை நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. இப்பணியை மற்ற பாலங்களிலும் மேற்கொள்ள உள்ளது. இதற்கிடையே, செடிகள் வளர்வதை நிரந்தரமாக தடுக்க என்ன செய்யலாம்? என வேளாண் துறையின் உதவியை நாட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்து, கடிதம் அனுப்பியுள்ளனர். விரைவில் இரு துறையினரும் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us