Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோத்ரா கலவர வழக்கு மீதான கண்காணிப்பு : குஜராத் மாநில அரசின் கோரிக்கை நிராகரிப்பு

கோத்ரா கலவர வழக்கு மீதான கண்காணிப்பு : குஜராத் மாநில அரசின் கோரிக்கை நிராகரிப்பு

கோத்ரா கலவர வழக்கு மீதான கண்காணிப்பு : குஜராத் மாநில அரசின் கோரிக்கை நிராகரிப்பு

கோத்ரா கலவர வழக்கு மீதான கண்காணிப்பு : குஜராத் மாநில அரசின் கோரிக்கை நிராகரிப்பு

ADDED : அக் 11, 2011 11:56 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்ற குஜராத் அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது.



கடந்த 2002 பிப்ரவரியில், குஜராத் மாநிலம் கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து, அங்கு கலவரம் பரவியது.

இந்த கலவரத்தில், 2,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லை எனக் கூறி, சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கும்படி கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. 'ஆமதாபாத் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் வேளையில், சுப்ரீம் கோர்ட் தனது கண்காணிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, மாநில அரசின் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கோரினார்.



இது குறித்து நீதிபதிகள் டி.கே.ஜெயின், சதாசிவம், அப்டாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் குறிப்பிடுகையில், 'குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பும் வழக்கு விசாரணையை கண்காணிப்பது புதிய நடைமுறையல்ல. இன்னும் சில மாதங்கள் கண்காணிக்கப்படும். அதன் பிறகு வழக்கு விசாரணை கண்காணிப்பை நிறுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us