/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சதுர்த்தி பிளக்ஸ் பேனர்களுக்கு கெடு கிடுக்கிப்பிடி : கட்சி பேனர்களுக்கும் அமல்படுத்தவேண்டும்சதுர்த்தி பிளக்ஸ் பேனர்களுக்கு கெடு கிடுக்கிப்பிடி : கட்சி பேனர்களுக்கும் அமல்படுத்தவேண்டும்
சதுர்த்தி பிளக்ஸ் பேனர்களுக்கு கெடு கிடுக்கிப்பிடி : கட்சி பேனர்களுக்கும் அமல்படுத்தவேண்டும்
சதுர்த்தி பிளக்ஸ் பேனர்களுக்கு கெடு கிடுக்கிப்பிடி : கட்சி பேனர்களுக்கும் அமல்படுத்தவேண்டும்
சதுர்த்தி பிளக்ஸ் பேனர்களுக்கு கெடு கிடுக்கிப்பிடி : கட்சி பேனர்களுக்கும் அமல்படுத்தவேண்டும்
ADDED : செப் 08, 2011 10:21 PM
பழநி : விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களுக்கு கட்டுப்பாடு விதித்தது போல, மற்ற விளம்பர போர்டுகளுக்கும் கிடுக்கிப்பிடி போட வேண்டும்.
அரசியல், ஆன்மிகம் போன்ற பொது விழாக்கள் மட்டுமின்றி வீட்டு விழாக்களுக்கும் பேனர் வைப்பது வாடிக்கையாகி விட்டது. இவை முக்கிய ரோடுகள், ரவுண்டானா, ரோடு சந்திப்புகளில், போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படுகின்றன. இதற்கு அனுமதி கொடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து தொடர்கிறது. விழாக்கள் முடிந்து பல மாதம் ஆன போதும், அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழநியில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விழா முடிந்த நிலையில், இவற்றை அகற்ற, போலீஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்டேஷன் வாரியாக, போர்டுகள் அகற்றம் குறித்த விபரங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இடையூறு ஏற்படுத்தும் அனைத்து போர்டுகளுக்கும், இதே கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். இதை கண்காணித்து நடவடிக் கை எடுக்க, சந்திரசேகரன் எஸ்.பி., உத்தரவிட வேண்டும்.


